கோபி: கோபி அருகே உள்ள 3 ஆயில் மில்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் காமராஜ் நகரில் பத்மாவதி, கிங், வெங்கடேஷ்வரா என 3 ஆயில் மில்கள் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த மில்களில் இருந்து ரீபைன்ட் ஆயில், நல்லெண்ணெய் வகைகள் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த 3 ஆயில் மில்களும் ஈரோட்டை சேர்ந்த சண்முகம் மற்றும் ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமானது.