தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் இன்று அதிவேகமாக சென்ற மினி பேருந்தும், மற்றொரு இலகு ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. எல்டோரடோ பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. இரண்டு வாகனங்களிலும் பயணித்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.