இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் உள்ள ஆற்றில் இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். நெதர்லாந்து நாட்டின் அரச தம்பதிகள் இந்தோனேஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்நாட்டின் கலிமண்டன் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளையும் அரச தம்பதிகள் பார்வையிட உள்ளனர். அங்கு படகு பயணமும் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்தோனேஷிய அதிகாரிகள் மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், அரச தம்பதிகள் பார்வையிட உள்ள கலிமண்டன் மாகாணத்தின் ஆற்று பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் படகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.