கடலூர்: காதல் திருமணம் செய்துகொண்ட சித்த மருத்துவர், தனது கணவருக்கும், அவரது வீட்டாருக்கும் பாதுகாப்பு வேண்டும் என கடலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். ஸ்ரீமுஷ்ணம் வட்டம் க.தொழூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா(24) என்பவர், தனது காதல் கணவருடன் வந்து கடலூர் எஸ்பி ஸ்ரீ அபிநவ்விடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் தற்போது மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் நங்கவள்ளி கிராமம். தந்தை மாணிக்கவேல், தாய் காயத்திரி. சித்த மருத்துவம் இளங்கலை முடித்துள்ளேன். மேலும் எனது சொந்தக் கிராமமான நங்கவள்ளியில் கிளினிக் வைத்துள்ளேன். நான் படித்த சித்த மருத்துவக் கல்லூரியில் எனக்கு சீனியர் ஆக படித்து வந்தவர் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் க.தொழூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். இரண்டு ஆண்டுகளாக மோகன்ராஜை காதலித்து வந்தேன். இது குறித்து வீட்டில் தெரிவித்தேன். ஆனால் வீட்டில் மோகன்ராஜிக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இல்லை. மேலும் வேறு இடத்தில் எனக்கு திருமணம் செய்யும் பணியில் எனது பெற்றோர் ஈடுபட்டனர்.