வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தையை சுற்றி ஏராளமான கடைகள் உள்ளது. இதில் சந்தையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் குப்பை மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாலாற்றின் கிளையாற்றின் இரு கரைகளிலும் இதேநிலை நீடிப்பதால், பொதுமக்கள் இப்பகுதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.