காத்மாண்ட்: இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிரபலமாக இருப்பது போல, நேபாள நாட்டில் இபிஎல் போட்டி மிகவும் பிரபலமானது. 2014ம் ஆண்டு முதல் இத்தொடர் நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018ல் நடைபெற்ற இபிஎல் தொடரில் லலத்பூர் பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில், இந்தாண்டு நேபாளத்தில் நடத்தப்படும் எவரஸ்ட் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 14ம் தேதி தொடங்குவதாக இருந்தது.
ஆனால், கொரோனா பாதிப்பு அச்சத்தால் இத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக, அத்தொடரின் நிர்வாக இயக்குநரான அமீர் அக்தர் அறிவித்துள்ளார். இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் உள்ளிட்ட பிரபல வீரர்கள் விளையாடுகின்றனர்.