திருமலை: தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம், பெத்தாபுரத்தை சேர்ந்தவர் சரத். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வனபர்த்தி மாவட்டம், கோபால்பேட்டா மண்டல கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சரத், தனது வீட்டில் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு டியூஷன் எடுப்பதாகக் கூறியுள்ளார். இதனால், தனியார் பள்ளியின் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சரத்திடம் டியூஷனுக்கு சேர்ந்தனர். இவர்களில் பல சிறுமிகளை மதுபோதையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.