திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கி கைதான சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைத்திருந்த லேப்டாப் திருட்டுபோன சம்பவத்தில், அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்க்க, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் ₹15 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.