அமமுக புதிய கட்சி அலுவலகம் 12ம் தேதி திறப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து டிடிவி.தினகரன் நீக்கப்பட்ட பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். இதையடுத்து, 2018ம் ஆண்டு சென்னை அசோக் நகரில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமான கட்டிடத்தில் கட்சி தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டது. பின்னர், டிடிவி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து பிரிந்து சென்று அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இருந்தாலும், இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமான கட்டிடத்திலேயே அமமுக தலைமை அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அமமுக கட்சி தலைமை அலுவலகத்தை ராயப்பேட்டைக்கு மாற்றும் பணி நடந்து வந்தது. தற்போது அந்த பணிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில் வரும் 12ம் தேதி ராயப்பேட்டையில் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட உள்ளது.

Related Stories: