சென்னை: அதிமுகவில் இருந்து டிடிவி.தினகரன் நீக்கப்பட்ட பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். இதையடுத்து, 2018ம் ஆண்டு சென்னை அசோக் நகரில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமான கட்டிடத்தில் கட்சி தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டது. பின்னர், டிடிவி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து பிரிந்து சென்று அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.