திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி அம்மன் தேரில் பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த பிப். 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 10ம் நாள் திருவிழாவான நேற்று காலை திண்டுக்கல் தெற்குரத வீதி, பொடிக்கார வெள்ளாளர் சங்கம் சார்பில் அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர்.