சென்னையை கலக்கிய தாதாக்களை கொலை செய்ய கல்லூரி மாணவர்களை தேர்வு செய்தது ஏன்?: * ஆந்திராவில் தலைமறைவான ரவுடிகள் * பின்னணி குறித்து பரபரப்பு தகவலகள்

சென்னை: நாட்டுவெடி குண்டு வீசிய வடசென்னை மற்றும் தென்சென்னை தாதாக்களை கொலை செய்ய கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. தாதாவாக வலம் வரும் தென்சென்னை ரவுடி சி.டி.மணி வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் மீது சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என இருவர் மீதும் தலா 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வடசென்னையில் யார் தாதா என்ற போட்டி கடந்த சில ஆண்டுகளாக காக்கா தோப்பு பாலாஜி மற்றும் புளியந்தோப்பு ரவுடியான பாம் சரவணன் தரப்புக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இதனால் அடிக்கடி இருதரப்பு ஆதரவாளர்களிடையே மோதல் நடந்து வருகிறது.

காக்கா தோப்பு பாலாஜி தனது அதிகார பலத்தால் பாம் சரவணனை போலீசாரிடம் சிக்க வைத்தார். சிறையில் உள்ள பாம் சரவணன் தனது ஆதரவாளர்களான புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த ரவுடிகளான தம்பா, செந்தில், செல்வம் ஆகியோர் மூலம் காக்கா தோப்பு பாலாஜியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். காக்காதோப்பு பாலாஜிக்கு சிடிமணியின் ஆதரவு இருப்பதால் அவனை கொலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இரண்டு ரவுடிகளையும் கொலை செய்து விட்டால் அடுத்தது சென்னை நமது கட்டுப்பட்டில் வந்து விடும் என்று முடிவு செய்தனர்.

இதற்காக ரவுடிகளான தம்பா மற்றும் செந்தில் ஆகியோர் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வரும் ரவுடி செல்வம் உதவி மூலம் நம்பிக்கையான கல்லூரி மாணர்கள் உட்பட 8 பேரை தேர்வு செய்துள்ளனர். அதன்படி தான் தி.நகர் ராஜாபிள்ளை தோட்டத்தை ேசர்ந்த நந்தனம் கல்லூரியில் படித்து வரும் மகேஷ்(20), அவரது நண்பரான 17 வயது சிறுவன், தண்டையார்பேட்டை பர்மா காலனியை ேசர்ந்த குமாரதாஸ்(30), தண்டையார் பேட்டை பிள்ளையர் கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர்(28), தண்டையார் பேட்டை பிள்ளையர் கோயில் தெருவை சேர்ந்த பிரசாந்த்(25), தண்டையார் பேட்டையை சேர்ந்த ஜான்(எ)ஜான்சன்(35) என 8 பேரை தேர்வு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கல்லூரிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்னர்.

கொலை செய்யக்கூடிய நாட்கள் மிக பெரிய தாதாக்கள் என்பதால் அவர்களை எளிதில் கொலை செய்ய முடியாது. இதனால் கல்லூரி மாணவன் உட்பட 8 பேருக்கும் கொலை செய்ய கூடிய நபர்களை எப்படி தாக்குவது, எப்படி அரிவாளால் வெட்டுவது, நாட்டு வெடி குண்டு எப்படி வீசுவது என்று ரவுடி தம்பா கடந்த 1ம் தேதியே புளியந்தோப்பு பகுதியல் உள்ள ரகசிய இடத்தில் செய்முறை விளக்கம் அளித்துள்ளார். அதன்படி காக்காதோப்பு பாலாஜி மற்றும் சி.டி.மணியை ரவுடி தம்பா ஆட்கள் கண்காணித்து வந்தனர். அப்போது வழக்கு ஒன்றில் ரவுடி சிடிமணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு கடந்த 3ம் தேதி வருவதாக தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேருக்கும் கஞ்சா மற்றும் 4 பைக்குகள், நாட்டு வெடி குண்டு மற்றும் துப்பாக்கிகளை கொடுத்து நீதிமன்றம் அருகே கண்காணிக்க அனுப்பி உள்ளனர்.

கஞ்சா ேபாதையில் இருந்த அவர்கள் கொலை செய்யும் வெறியில் மட்டுமே இருந்தனர். மற்றவற்றை மறந்தனர். இந்நிலையில் ரவுடிகளின் திட்டத்தின் படி 3ம் தேதி மதியம் 3 மணிக்கு  சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் விலை உயர்ந்த சொகுசு காரில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிமன்ற பணிகள் முடிந்து 3.30 மணிக்கு இருவரும் காரில் புறப்பட்டு தேனாம்பேட்டை நோக்கி சென்றனர். அண்ணாசாலையை அடைந்த உடன் யாரோ காரை பின் தொடர்வதாக சந்தேகமடைந்த சி.டி.மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் தாங்கள் வந்த காரில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். ஆனால் இவர்களை 4 பைக்குகளில் பின் தொடர்வது அவர்களுக்கு தெரியாது.

கார் அண்ணா மேம்பாலம் முன்பு உள்ள சிக்னலில் கார் நிற்கும் போது தான் காரை சுற்றி 4 பைக்குகளில் 8 பேர் சுற்றி வளைத்தது சி.டி.மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜிக்கு தெரியவந்தது. உடனே அதிவேகமாக காரை இயக்கி அண்ணாமேம்பாலத்தில் எதிர்திசையில் சென்று அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது அவர்கள் சென்ற கார் மீது 2 நாட்டு  வெடிகுண்டுகள் வீசினர். அதில் இருந்து இரண்டு தாதாக்களும் தப்பியதால் அடுத்து பின் தொடர்ந்து வந்த மற்றொரு குழு துப்பாக்கியால் சுட்டனர். அதில் இருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் காரில் தப்பி சென்ற இரண்டு தாதாக்களான சிடி மணி மற்றும் காக்காதோப்பு பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர்கள் தற்போது ஆந்திராவில் பதுங்கி உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையே தாதாக்களை கொலை செய்ய திட்டத்ைத செயல்படுத்திய ரவுடிகளான தம்பா மற்றும் செந்தில், செல்வம் ஆகியோரும் ரயில் மூலம் வெளி மாநிலத்திற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவன் உட்பட 8 பேருக்கும் கொலை செய்ய கூடிய நபர்களை எப்படி தாக்குவது குறித்து ரவுடி தம்பா புளியந்தோப்பு பகுதியல் உள்ள ரகசிய இடத்தில் செய்முறை விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: