மூணாறு: மூணாறில் சாலையோர ஆக்கிரமிப்புகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை ஆற்றில் கொட்டுபவர்கள் போன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மூணாறு காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை கண்டறிவதற்காக மூணாறு பஞ்சாயத்து அலுவலகத்திலும் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.மூணாறில் சாலையோர ஆக்கிரமிப்புகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் முதிரை புழை ஆற்றில் குப்பைகள் கொட்டுபவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மூணாறு காவல்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பழைய மூணாறு ப்ளோசம் பூங்கா முதல் மூணாறு டவுன், மாட்டுப்பட்டி சாலை, ராஜமலை சாலை, ரோஸ் கார்டன் போன்ற பகுதிகளில் மூணாறு காவல்துறை சார்பில் 41 சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மூணாறில் பஞ்சாயத்து அலுவலகத்தில் சி.சி.டி.வி. காமிராக்களின் கட்டுப்பாட்டு அறை திறப்பு
- சிசிடிவி
- கட்டுப்பாட்டு அறை
- திறப்பு
- மூணா பஞ்சாயத்து அலுவலகம்
- மூணார் பஞ்சாயத்து அலுவலக கட்டுப்பாட்டு அறை