புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏ.வி.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜூலை முதல் தற்போது வரை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நமச்சிவாயம் என்பவர் பதவி வகித்து வந்தார். இதுமட்டுமல்லாமல் 2016ம் ஆண்டு புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தவுடன், முதலமைச்சருக்கு அடுத்த பதவியான பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும், நமச்சிவாயமே வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் ஒருவருக்கு ஒருபதவி தான் இருக்க வேண்டும். ஆனால் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். இரு பதவி இருப்பதால் அவருக்கு வேலை சுமை அதிகமாக உள்ளது.