சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அதில் பலரும் ராஜிவ்காந்தி நினைவிடத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் என்பவர், ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அவதூறாக வசனம் பேசி டிக்டாக் செயலியில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையிலான கட்சியினர் பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டிக்டாக் செயலியில் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு வருத்தம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ராஜிவ்காந்தி நினைவிடத்தில் டிக்டாக் வீடியோ பதிவிட்டிருந்தேன். அதை ஒருசிலர் பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.