கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் நேற்று கே.பி.முனுசாமி அளித்த பேட்டி: சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர், கட்சியில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று சொல்வது, அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். சட்டரீதியாக அவர் வெளியே வருவார்களா என்று சொல்வது சந்தேகம் தான். காரணம் சிறைச்சாலையில் அவர் நன்னடத்தையோடு செயல்படவில்லை என்று தெரியவந்துள்ளது. தவறுகள் செய்துள்ள அவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.