சென்னை: சென்னை செம்பாக்கத்தில் போலி கால்சென்டர் நடத்திய கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாக டெபிட், கிரெடிட் கார்டுகளின் தகவல்களைப் பெற்று மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் அளித்த புகாரில் சலீம், அவரது கூட்டாளி ஜாகீர் உசேனை காவத்துறை கைது செய்தது.