வேலூர்: வேலூர் மாங்காய் மண்டிக்கு கடப்பாவில் இருந்து சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் மாங்காய் மண்டிக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாம்பழம், தர்பூசணி உட்பட பழங்கள் சீசனுக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து வேலூர் மங்காய் மண்டிக்கு சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 10 டன் வரை சாத்துக்குடி வரத்து இருக்கிறது. இங்கு அதிகளவில் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு பழங்களின் அளவுக்கு ஏற்ப, கிலோ ₹50 முதல் ₹60 வரை விற்பனை ெசய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.