டெல்லி வன்முறை: உயிரிழந்த தலைமைக் காவலரை தியாகியாக அறிவிக்க கோரி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம்

டெல்லி: டெல்லி வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரை தியாகியாக அறிவிக்க வேண்டும் என கோரி சிகார் பகுதியில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவு  மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது.  கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி  நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். எனினும், இந்த கலவரத்தில், கோகுல்புரியில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ரத்தன் லால் என்பவர்  கொல்லப்பட்டார்.

Related Stories: