திருச்சுழி: நரிக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் உள்ளதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்கி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குறையறைவாசித்தான் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டிடம் மழை, வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விழுகின்றன. மழை காலங்களில் ஒழுகுவதால் குழந்தைகளை அமர வைக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.