மும்பை: சிஏஏ, என்ஆர்சியால் பாதிப்பில்லை என தான் கூறிய கருத்து கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு தான் என உத்தவ் தாக்கரே விளக்கமளித்துள்ளார். மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக பாஜ.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற சிவசேனா, கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அதனுடன் இருந்த உறவை முறித்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. இக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) திட்டங்களையும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு ஆதரவு தெரிவித்த உத்தவ் தாக்கரே, சிஏஏ. தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.