ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில், பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.