பிஜீங்: சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று நள்ளிரவு வரை 2,239 பேராக அதிகரித்தது. ஒரே இரவில் 120 இறப்புகள் பதிவாகியுள்ளன. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 75,500 ஆக உள்ளது. தேசிய சுகாதார ஆணையம் (என்எச்சி) நாடு முழுவதும் 889 புதிய நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சிறையில், குறைந்தது 27 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பதிவாகியுள்ளன. ஜைனிங்கில் உள்ள ரென்செங் சிறையில் கிட்டத்தட்ட 450 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.