வாஷிங்டன் : குடியுரிமை திருத்தச் சட்டம்,தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சர்வதேச மத சுதந்திரக்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளதாகவும் அந்த சட்டங்கள் பாஜக அரசின் இந்துத்துவா சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CAA, NPR ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் எச்சரிக்கை
- சிஏஏ
- இஸ்லாமியவாதிகள்
- இந்தியா
- என்பிஆர்
- சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் CAA
- சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்