புதுடெல்லி: பாஜ. தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் அவ்வபோது டிவிட்டரில் அவரது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பயிர் காப்பீடு திட்டத்துக்கான பங்களிப்பை மத்திய அரசு குறைக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:பயிர் காப்பீடு திட்டத்தை தேவைப்பட்டால் மட்டும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்திருப்பது, பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும்.