தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கழிவுநீர் கடத்த வழியில்லாததால் ஒர்க் ஷாப் நகர் நகரில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் கொசுத்தொல்லையால் இப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ளது ஒர்க் ஷாப் நகர். இங்கு நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளும், ஒர்க் ஷாப்களும் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் மெயின் ரோட்டிற்கு வந்து அங்கிருந்து கொட்டகுடி ஆற்றில் கலந்து வந்தது.
முறையான பராமரிப்பு வசதிகள் இல்லாததால் இந்த சாக்கடை முழுமையாக மூடப்பட்டு விட்டது. இதனால் ஒர்க் ஷாப் நகரில் இருந்து கழிவுநீர் வெளியேற வழியில்லை.