டோக்கியோ: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. டைமன்ட் பிரின்சஸ் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல் கடந்த 3ம் தேதி முதல் ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஓரு முதியவருக்கு பரவிய கொரோனா வைரஸ் தற்போது 454 பேரை தாக்கியுள்ளது. மொத்தமுள்ள 3,700 பேரில் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவிய வண்ணம் உள்ளது.
சொகுசு கப்பலில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க ஜப்பான் அரசு முடிவு!
- அரசு
- ஜப்பனீஸ்
- பாதிக்கப்பட்டவர்களுக்கு
- எச்.ஐ.வி மருந்து சோதனைகள்
- கப்பல் வெளியேற்றங்கள்
- கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடு