சேலம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு, மாலை நேரத்தில் விமான சேவை தொடர இந்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார். சேலத்தையும் சென்னையையும் இணைக்கும் விமான சேவை காலை மட்டுமே இருந்து வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று இனி மாலை நேரத்தில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.