புதுடெல்லி: டெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க, காவல்துறையின் சிறப்புக் படைவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், புல் பிரஹலத்பூரில் இன்று அதிகாலையில் சிறப்பு படை போலீசார், குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றனர். அப்போது, போலீசார் இருவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், அவர்கள் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பேர் பலத்த காயமடைந்து விழுந்தனர்.
டெல்லியின் புல் பிரஹலத்பூர் பகுதியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
- பகுதியில்
- தில்லி
- காளை பிரஹலத்பூர்
- டெல்லி என்கவுண்டர்: குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்
- டெல்லி போலீஸ் சிறப்பு செல்
- புல் பிரஹலத்பூர் பகுதி