மானாமதுரை: தெற்குரயில்வேக்கு உட்பட்ட அனைத்து வழித்தடங்களும் மூன்று ஆண்டுகளுக்குள் மின்மயமாக்கப்படும் என மத்திய ரயில்வே பொது மேலாளர் ஒய்.பி.சிங் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரயில்வே வழித்தடம் மின்மயமாக்கப்படும் பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்மயமாக்கல் ரயில்வே பொதுமேலாளர் ஒய்.பி.சிங் கூறியதாவது: தெற்கு ரயில்வே இருப்புப்பாதையில் தற்போது 1,137 கி.மீ. தூரத்தில் ரயில்கள், டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கு ரயில்வேயில் உள்ள 1,137 கி.மீ. தூரத்தை மின்மயமாக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக மானாமதுரை - மதுரை இடையேயான ரயில்பாதை மின்மயமாக்குவதற்கான பூமி பூஜை தற்போது தொடங்கியுள்ளது.