வத்திராயிருப்பு: கம்பிவேலியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வத்திராயிருப்பில் தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம் செல்லும் வழியில் சின்னஊரணி அருகில் கருப்பசாமி கோயில் உள்ளது. கோயிலை சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பகுதியிலுள்ள இடத்தில் தாலுகா அலுவலகம் கட்ட வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கம்பிவேலியை அகற்ற சென்றனர். இதற்கு ஒரு சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கம்பிவேலி அகற்றுவது நிறுத்தப்பட்டது.