திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு பள்ளியில் கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், நாகல் நகர் சந்தை ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள கழிவறைகளை தண்ணீர் ஊற்றி துடைப்பத்தை கொண்டு சீருடையில் மாணவிகள் சுத்தம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.