புதுடெல்லி : போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோசா, 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப்பின் இரு நாடுகள் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தெற்கு ஐரோப்பாவில் உள்ள இந்தியாவின் நட்பு நாடு போர்ச்சுக்கல். கடந்த 15 ஆண்டுகளாக, இரு நாடுகள் இடையேயான உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தீவிரவாத வழக்குகளில் சிக்கிய அபு சலேம், மோனிகா பேடி ஆகியோரை போர்ச்சுக்கல் அரசு கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தியது. கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய போர்ச்சுக்கல் அதிபர் இந்தியா வந்தார். பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு போர்ச்சுக்கல் சென்றார். அப்போது, இரு நாடுகள் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.