சென்னை: தொழில்துறை உற்பத்தி கடந்த டிசம்பரில் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவில் உள்ளது. இது மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பொருளாதாரத்துக்கு முக்கிய பலமாக உள்ள தொழில்துறைகளில் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றம் அடையவில்லை. ஏறக்குறைய கடந்த ஆண்டு முழுக்க உற்பத்தி சரிவையே சந்தித்து வந்துள்ளது. தொடர்ந்து மூன்று மாத சரிவுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் 1.8 சதவீதம் அதிகரித்தது சற்று ஆறுதலாக இருந்தது. இருப்பினும் டிசம்பரில் மீ்ண்டும் உற்பத்தி சரிந்து விட்டது. இதுற்கு உற்பத்தி துறையில் 1.2 சதவீதம் சரிவு ஏற்பட்டதே காரணம். மூலதன பொருட்கள் உற்பத்தி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.2 சதவீதம் குறைந்து விட்டது. மின்சார உற்பத்தி, சுரங்க துறைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.