பெங்களூர்: நடப்பு ரஞ்சி தொடரில் கர்நாடகா-பரோடா மோதும் லீக் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடக்கிறது. அதில் 2வது நாளான நேற்று வர்ணனையாளரில் ஒருவர் திடீரென, ‘‘ ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும். இந்தி எங்கள் தாய்மொழி. இதை விட பெரிய மொழி எதுவுமில்லை’’ என்று கூறினார். அதனை வரவேற்ற மற்றொரு வர்ணணையாளர், ‘நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் கட்டாயம் எங்கள் தாய் மொழியான இந்தி மொழியை பேச வேண்டும்’ என்று சொன்னார். இந்த வர்ணனை வீடியோ நேற்று வைரலானதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் கொஞ்சம்....