சென்னை: புழல் அருகே, காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலதிபர் உடல் கருகி பலியானார். புழல் அருகே புத்தாகரம், மகாதேவி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முத்துசுப்பிரமணி (60), தொழிலதிபர். இவர், அண்ணாநகரில் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். இவரது ஒரே மகன் மித்ரா (20). லண்டனில் படித்து வருகிறார். முத்துசுப்பிரமணி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் மித்ரா சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மித்ரா வெளியே சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டை திறந்து பார்த்தபோது உள்ளே புகை மண்டலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.