அண்ணாநகர்: வில்லிவாக்கம், பாரதி நகர், 1வது தெருவை சேர்ந்தவர் அம்மு (48). இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களில் ஒரு மகன், ஒரு மகளுக்கு திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். கடைசி மகனான கணேசன் (22) என்பவருக்கு திருமணமாகாததால், தாயுடன் வசித்து வந்தார். அம்மு, அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு வேலை செய்து வருகிறார். அதே கம்பெனியில் சூபர்வைசராக பணிபுரியும் தாம்பரத்தை சேர்ந்த கண்ணன் (32) என்பவருடன் அம்முவுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. கண்ணன் அடிக்கடி அம்மு வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றி அறிந்த அம்முவின் மகன் கணேசன், தாய் அம்மு மற்றும் கள்ளக்காதலனை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.