கும்பகோணம்: தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணம் காந்திபூங்கா அருகில் பிள்ளையார் கோயில் எதிரே உள்ள காந்திசிலை முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. செயலாளர் சுவாமிமலை விமலநாதன் தலைமை வகித்தார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நூறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை 100 நாட்களிலிருந்து 200 நாட்களாக உயர்த்தி அந்த திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.