ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவில் தமிழகம் - சவுராஷ்டிரா மோதும் லீக் ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. நடப்பு ரஞ்சி தொடரின் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எலைட் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு இதுவரை 7 லீக் ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளதுடன், 3 போட்டிகளில் டிரா செய்து 19 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கும் கடைசி லீக் போட்டியில் சவுராஷ்டிரா அணியை தமிழ்நாடு எதிர்கொள்கிறது. சவுராஷ்டிரா அணி இதுவரை 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.