சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோவிலின் தேர் திருவிழாவின் போது இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. கடைகள் மற்றும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால், காவலர்கள் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தன. அப்போது இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி மோதலாக வெடித்தது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த இருத்தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.