புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தில் தேவை, நுகர்வு, முதலீடு குறைவாக உள்ளது. இதனால் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. நாட்டில் அச்சம் மற்றும் நிலையற்ற தன்மை நீடிக்கிறது. பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில்(ஐசியு) உள்ளது என பா.ஜ அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக 4 ஆண்டுகள் இருந்த அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார். ஆனால், என்னை கேட்டால், ஐசியு.வில் இருக்க வேண்டிய நோயாளி அதற்கு வெளியே உள்ளார். அவருக்கு தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர் என சொல்வேன்.