அமமுகவில் திருவள்ளூர், விருதுநகர் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவில் திருவள்ளூர், விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக  இருந்த லக்கி முருகன் விடுவிக்கப்பட்டு, போரூர் பிள்ளையார் கோயில் முதல் தெருவைச் சேர்ந்த ஜீவானந்தம், புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். விருதுநகர் மாவட்டம் 2ஆக பிரிக்கப்பட்டு, விருதுநகர் மேற்கு மாவட்டம்,  மத்திய மாவட்டமாக பிரிக்கப்படுகிறது. மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம், வில்லிபுத்தூர், மத்திய மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசியும் சேர்க்கப்படுகிறது.விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக காளிமுத்துவும், மத்திய மாவட்டச்  செயலாளராக எஸ்.ஜிசுப்பிரமணியன் நியமிக்கப்படுகின்றனர். கட்சியின் இளைஞர் பாசறை துணை செயலாளர் பொறுப்பில் இருந்த விக்னேஷ், சரவணக்குமார் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: