சேலம்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் கிளை, கோவையில் செயல்பட்டு வருகிறது. இதற்காக கடையின் ஊழியர் கவுதம்(26) உள்பட 3 பேர், ஹைதராபாத்தில் இருந்து 1 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த நகைகள், மற்றும் தங்க நகைளை நேற்றுமுன்தினம் கோவைக்கு கொண்டு சென்றனர். இவர்கள் வந்த சொகுசு பஸ் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் வந்தது. அங்குள்ள ஓட்டலில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். கவுதம் மற்றும் அவருடன் வந்தவர்கள், நகை பையை இருக்கையின் கீழ் பகுதியில் வைத்துவிட்டு சாப்பிட சென்றனர். பின்னர் வந்து பார்த்தபோது பை மட்டுமே இருந்தது. 1 ேகாடி மதிப்புள்ள நகைகளை காணவில்லை. புகாரின்படி சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர்.