கொரோனா வைரஸ் காரணமாக மங்களூரு கப்பல் ஊழியர் திருமணம் ஒத்திவைப்பு

மங்களூரு: கர்நாடகாவின் மங்களூரு  மாவட்டம் கம்பல நகரை சேர்ந்தவர் கவுரவ். வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்து வருகிறார்.  இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சேகர் பூஜாரி என்பவரின் மகள் பிரியங்காவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் இன்று காலை நடத்தப்பட இருந்தது. இந்நிலையில்,  சுற்றுலா கப்பலில் வேலை செய்யும் கவுரவ், கடந்த 4ம் தேதி மங்களுரு  வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இவர் வேலை செய்யும் கப்பல் தற்போது  ஹாங்காங், சிங்கப்பூர், தைவான் கடல் பகுதியில் சுற்றி வருவதால்  அப்பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல்,  கப்பலில் உள்ள 1,700 பேரில் சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தெரிய  வந்துள்ளது. இதனால், கப்பலை கரைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலை பெற்றோரிடம் அவர் தெரிவித்தார். இதனால், திருமணத்தை தள்ளிவைக்க இருவீட்டார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: