சென்னை:நாடாளுமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது:இந்தியாவும், இலங்கையும் செய்துகொண்ட இருதரப்பு ஒப்பந்தங்கள், பன்னாட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை மீறி, கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது, அது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.இதற்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் பதில் அளித்து பேசியதாவது:வங்கக்கடலில் பன்னாட்டு எல்லையை கடந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததற்காக 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை 3470 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் 3450 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.