நெய்வேலி: நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய், வேனுக்கு மேல் ஏறி தன்னைப் பார்க்க வந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 12 தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. இடையில் வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் 6 தேதி பாஜகவினர் என்.எல்.சி சுரங்க நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் திரைப்படத்தின் படப்பிடிப்பை எடுக்க எடுப்பதற்கு அனுமதி கொடுத்தது யார் உடனே அதை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்.