உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்பட்டு வரும் வாகன விபத்துகளால் ஏராளமானவர்கள் உயிரிழந்தும், படுகாயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் இருந்து அஜீஸ்நகர், பாலி, ஷேக்உசேன் பேட்டை, ஆசனூர், எறஞ்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துகளினால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் விபத்துகளை தடுக்க அதிக விபத்துகள் நடைபெற்று வரும் இடங்களில் சிறு மேம்பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அஜீஸ்நகர், பாலி பகுதியில் சிறு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு பக்கவாட்டு சுவர்கள் அமைக்கப்பட்டது. ஆசனூர் கிராமத்தில் இதே போல் மேம்பாலம் அமைப்பதற்கான அடிப்படை பணிகள் துவங்கப்பட்டது.