முசாபர்நகர்: பலமுறை நோட்டீஸ் விடுத்தும், டிமிக்கி கொடுத்து வந்த போலீஸ் எஸ்ஐயின் சம்பளத்தை நிறுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2006ல் உள்ளாட்சி தேர்தல் நடந்த போது, சமாஜ்வாடி கட்சி தலைவரான முசாபர் ரானா சுட்டுக் கொல்லப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு, முசாபர்நகரில் இருந்து மீரட்டின் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி கதிர் ரானா, அவரது சகோதரரும் முன்னாள் எம்எல்ஏவுமான நூர் சலீம் ரானா ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இவ்வழக்கு பல ஆண்டாக மீரட் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.