பெய்ஜிங்: வூஹான் நகரில் கொரானா பாதித்த அமெரிக்க நாட்டவர் ஒருவர் இன்று உயிரிழந்ததாக, பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹூபே மாநிலத்தில் உள்ள வூஹான் நகரை மையமாக வைத்து கரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக சீனாவை மிரட்டி வரும் இந்த வைரசுக்கு இதுவரை அந்நாட்டில் 722 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது.