சேலம்: டி.என்.பி.எஸ்.சி. அரசு பணித்தேர்வு முறைகேட்டை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முழுக்கங்கள் எழுப்பப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.