சூலூர்: அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு பிப்.21ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சூலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி அ.தி.மு.க. பெயரில் போலி இணையதளம் உருவாக்கி அதன்மூலம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் அளித்தார். புகாரின்பேரில் கடந்த மாதம் 25ம் தேதி கே.சி. பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ேக.சி. பழனிச்சாமியை பிப்.7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கே.சி. பழனிச்சாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.